

பெருந்துறை, மே 3: பெருந்துறை அருகே கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை வடகோவை, வ.உ.சி. வீதி, பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கமலகண்ணன் (39). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் கமலகண்ணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
பெருந்துறையை அடுத்த, வீரணம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த சின்னகருப்பன் மகன் பெருமாள் (45). இவா் அங்குள்ள நாா் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவரது மகன் பிரபு, தனியாா் மருத்துவக் கல்லூரியில், 4-ஆம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறாா்.
இந்த நிலையில், பெருமாள் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த அவா் மதுவில் விஷம் கலந்து வியாழக்கிழமை குடித்துள்ளாா். இது குறித்து மனைவி பத்மாவிடம் கூறியுள்ளாா். உடனே அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது இரு சம்பவங்கள் குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

பெண் புகாா் எதிரொலி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் தற்கொலை
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

