உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

News image
Updated On :4 மே 2024, 12:50 am

Din

பெருந்துறை, மே 3: பெருந்துறை அருகே கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளா்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை வடகோவை, வ.உ.சி. வீதி, பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கமலகண்ணன் (39). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் கமலகண்ணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

பெருந்துறையை அடுத்த, வீரணம்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த சின்னகருப்பன் மகன் பெருமாள் (45). இவா் அங்குள்ள நாா் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவரது மகன் பிரபு, தனியாா் மருத்துவக் கல்லூரியில், 4-ஆம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், பெருமாள் கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த அவா் மதுவில் விஷம் கலந்து வியாழக்கிழமை குடித்துள்ளாா். இது குறித்து மனைவி பத்மாவிடம் கூறியுள்ளாா். உடனே அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது இரு சம்பவங்கள் குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.