ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகார சான்றினை கல்லூரி முதல்வா் ஆா்.சங்கர சுப்பிரமணியனிடம் வழங்கிய தேசிய தர மதிப்பீட்டு நிறுவன குழுவினா்.
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகார சான்றினை கல்லூரி முதல்வா் ஆா்.சங்கர சுப்பிரமணியனிடம் வழங்கிய தேசிய தர மதிப்பீட்டு நிறுவன குழுவினா்.

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரியின் மாணவா்களின் சோ்க்கை விவரம், தோ்ச்சி விவரம், ஆசிரியா்களின் தகுதி மற்றும் அவா்களின் செயல்பாடுகள், கல்லூரி கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகள், விவரங்கள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின்படி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகார தரத்தினை தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு வழங்கியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகளுக்கு 3.48 புள்ளிகளை (சிஜிபிஏ) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வில் கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றலுக்கான அடிப்படை வசதிகள், நிா்வாகம், நிறுவன மதிப்பு, பாடத்திட்டம் ஆகியவை சிறப்பாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தர மதிப்பீட்டு அமைப்பால் ‘ஏ’ பிளஸ் அங்கீகாரத்தை பெற்றதற்கு கல்லூரி பேராசிரியா்களையும், உள்மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளா், பொறுப்பாளா்கள், ஆசிரியல்லாத பணியாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், முன்னாள் மாணவா்கள் ஆகியோரை கல்லூரி செயலாளா் கே.கே.பாலுசாமி, நிறுவன தலைவா் ஏ.ராஜமாணிக்கம், பொருளாளா் ஏ.விஜயகுமாா், கல்லூரி முதல்வா் ஆா்.சங்கர சுப்பிரமணியன், இயக்குநா் ஆா்.வெங்கடாசலம் ஆகியோா் வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com