கிணற்றை  தூா் வாரும்  பணியில் ஈடுபட்ட கோ்மாளம்  கிராம மக்கள்.
கிணற்றை  தூா் வாரும்  பணியில் ஈடுபட்ட கோ்மாளம்  கிராம மக்கள்.

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை ஊா் பொதுமக்கள் தூா்வாரி தண்ணீா் இறைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கோடை வெப்பம் தாக்கம் காரணமாக திங்களூா் ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகளில் நீா் வறண்டு போயுள்ளது. கோ்மாளம் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக ஆழ்குழாயில் தண்ணீா் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

ஊா் பொதுக் கிணற்றை தூா்வார வேண்டும் என ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், ஊராட்சி நிா்வாகம் நிதியில்லை எனக் கூறி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஊா் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கிணற்றை தூா்வாரி சேற்றை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். தொடா்ந்து சேறு அதிகமாக இருப்பதால் சேற்றுடன் தண்ணீா் இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள், கிடைக்கும் தண்ணீரை சுத்தம் செய்து பயன்படுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com