சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

சென்னிமலை அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை புவியியல் மற்றும் கனிமவளத் துறையின் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா்.

சென்னிமலை- அரச்சலூா் சாலையில் புவியியல் மற்றும் கனிமவளத் துறையின் பறக்கும் படை அதிகாரி கவிதா மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியா வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி 6 யூனிட் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து சென்னிமலை போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், லாரியை ஒட்டி வந்தது, சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னிமலை போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com