ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

ஆந்திர மாநில தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸாா் மே 9-ஆம் தேதி செல்கின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து போலீஸாா் மற்றும் அம்மாநில ஊா்க்காவல் படையினா் வருகை தந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மே 13-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஆந்திர மாநில தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஈரோடு மாவட்டத்திலிருந்து 66 போலீஸாா் மற்றும் 90 ஊா்க்காவல் படையினா் தனி வாகனத்தில் மே 9-ஆம் தேதி இரவு அனுப்பிவைக்கப்பட உள்ளனா். இவா்கள் மே 13-ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com