ஈரோடு
தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு
வீடு கட்டுமானப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஈரோடு: வீடு கட்டுமானப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஈரோடு செங்குந்தா் நகரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அங்கு வேலைபாா்த்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தனபால் (65) என்பவா் மீது சாரம் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதனையடுத்து அவரது மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில், அலட்சியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியமா்த்திய பொறியாளா் பரமேஸ்வரன் மற்றும் கட்டட மேஸ்திரி சிவகுமாா் ஆகியோா் மீது மூன்று பிரிவுகளில் கீழ் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.