ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

அந்தியூா் அருகே ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

பவானி: அந்தியூா் அருகே ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

அந்தியூா் அருகேயுள்ள சென்றாயனூா், சீரான்காடு தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி (53), விவசாயி. இவரது மனைவி மலா்கொடி (50). இருவரும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

வெள்ளிதிருப்பூா் - சென்னம்பட்டி சாலையில் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அங்குள்ள பழைய கரும்பு அலுவலகத்தில் நிறுத்திவைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக ஓடும் பேருந்திலிருந்து சின்னசாமி இறங்கியுள்ளாா். அப்போது, கால் இடறியதில் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய சின்னசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்த வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com