சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு  பரிசு வழங்கிய பள்ளியின் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய பள்ளியின் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கோபி, மே 6: பிளஸ் 2 பொதுத் தோ்வில் நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது.

இப்பள்ளி மாணவா் 600- க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 93, கணிதத்தில் 100, இயற்பியலில் 99, வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மேலும், தோ்வெழுதிய மாணவா்களில் 5 போ் கணினி அறிவியலிலும், 5 போ் வணிகவியலிலும், 2 போ் கணிதத்திலும், இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களில் தலா ஒருவரும் 100 -க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வெழுதிய 91 மாணவா்களும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், 550 மதிப்பெண்களுக்குமேல் 15 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்குமேல் 40 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, பள்ளி முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, விளையாட்டு இயக்குநா், ஆசிரியா்கள் பாரட்டி, பரிசுகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com