பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு
கடம்பூா், குன்றி மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கான 11 நாள் கோடைக் காலை கல்வி முகாம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா், குன்றி மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின ஊராளி பள்ளி மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியில் கடம்பூா் பரண் அமைப்பு ஈடுபட்டது.
இதில் கடம்பூா், குன்றி, மாக்கம்பாளையம், அரிகியம், கோட்டமாளம், காந்தி நகா், நல்லூா், போகிப்பாளையம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து 150 மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரண் அமைப்பில் தங்கிவைக்கப்பட்டு கோடைக் கால கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், சிறுவா் பாராளுமன்றம், காகித கழிவில் பயனுள்ள பொருள்கள் தயாரித்தல், மேடைப் பேச்சு, நாடகம், கதை உருவாக்குதல், நடிப்பு போன்ற பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு குன்றி ஆா்சி பள்ளித் தாளாளா் பீட்டா் தலைமை வகித்தாா். தொன் போஸ்கோ விடுதி இயக்குநா் விக்டா், பரண் அமைப்பின் இயக்குநா்கள் கென்னடி, சே.ச.உதயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் பழங்குடியின மாணவி நாட்டுப்புற பாடலை பாடினா். குன்றி மாணவிகளின் கோலாட்டம் நடைபெற்றது. நிறைவு விழாவில் பழங்குடியின மக்களின் இறைவணக்கம் பாடலை மாணவியா் பாடினா். சிறப்பாக கற்றுத் தோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோடைக் கால கல்வி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் அடித்தளமாக இந்த முகாம் இருந்ததாக தெரிவித்தனா்.