வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

News image

விவசாயிகளுக்கு மண் வள அட்டை குறித்து விளக்கம் அளிக்கும் ஜே.கே. கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

Updated On :9 மே 2024, 9:46 pm

Din

பெருந்துறை, மே 9 : பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கோபியை அடுத்த டி.என்.பாளையம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி 4- ஆம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ், பெருந்துறையில் தங்கி விவசாயம் குறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் கிராமத்தில் மண் வள அட்டையின் பயன்கள், விண்ணப்பித்தல் மற்றும் பெறும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கி கூறினா்.

மேலும், மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் உழவன் செயலி பற்றி யும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.