உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர் கூட்டத்தில், குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம், மின் வசதி உள்ளிட்டவைகள் கோரி 177 மனுக்களை பொது மக்கள்அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில், முன்னாள் படைவீரரின் கைம்பெண்கள் குடும்ப நல நிதியாகவும், குடும்ப நல நிதியாகவும் 3 பேருக்கு ரூ.60,000, கண் கண்ணாடி வாங்குவதற்காக 2 பேருக்கு ரூ.6,000, ஈமக்கிரியை மானியமாக ரூ.15,000 உள்பட நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சூழல் துறை சார்பில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, நீலகிரியின் சூழலைக் காப்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைப் பயண நாடக நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.