கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் உள்ள சூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் முன்னேற்றம் தரும் கருத்துகளைக் கொண்ட பல புத்தகங்கள் வழங்கப்பட்டன. வாசிப்பு இயக்கத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் பாகீரதி தொடக்கிவைத்தார். அறிவியல் ஆசிரியர் மோகன், ச.ராமலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கினர். ஆசிரியர்கள் அ.நாகநாதன், ஐ.கிரிஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.