மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மைக்காலமாக வானிலை மேகமூட்டமாக காணப்படுவதால் தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு, தென் மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனது. ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய பனிப்பொழிவும், மழையும் பெய்து வருகிறது.
இதனால், மஞ்சூர், எடக்காடு, பிக்கட்டி, கைகாட்டி, தாய்சோலை, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1, 000 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை செடிகளில் கொப்பள நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.