கோத்தகிரி அருகே உள்ள பேட்லாடா மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 29-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டு மாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளித் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.