குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனமும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்டத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்பிரமணி, உதகையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துகொண்டிருந்தார். அப்போது, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கேஎம்எஸ் பகுதி அருகே இந்த இருசக்கர வாகனமும், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியும் மோதிக் கொண்டது.
இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார். இது குறித்து வெலிங்டன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.