விபத்தில் ஊழியர் சாவு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனமும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்டத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்  உயிரிழந்தார்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனமும், டிப்பர் லாரியும் மோதிக்கொண்டத்தில் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்  உயிரிழந்தார்.
கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்பிரமணி, உதகையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துகொண்டிருந்தார். அப்போது,  குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கேஎம்எஸ் பகுதி அருகே இந்த இருசக்கர  வாகனமும், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியும் மோதிக் கொண்டது.
இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார்.  இது குறித்து வெலிங்டன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com