காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பந்தலூர் அடுத்துள்ள உப்பட்டியில் கடையடைப்பு மற்றும் கண்டனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆதரவாக உப்பட்டி பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கண்டனப் பேரணி பவர் ஹவுஸ் பகுதியில் துவங்கி பஸ் நிலையம் சந்திப்பில் நிறைவு பெற்றது. பேரணிக்கு முஸ்லிம் லீக் தலைவர் ஆலி தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் தர்மண், ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி து.ராஜேந்திர பிரபு, நகர நிர்வாகி ஆசை, வியாபாரிகள் சங்க நிர்வாகி மோகன்தாஸ் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள்,வியாபாரிகள் கலந்துகொண்டனர்.