ஆடி அமாவாசையை ஒட்டி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கோயில்களை ஒட்டியுள்ள ஆற்றங்கரைகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல் மஹா விஷ்ணு கோயில் ஆற்றங்கரை, பொன்னாணியில் உள்ள விஷ்ணுகோயில் ஆற்றங்கரை, கம்மாத்தி, வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்கள் அருகே உள்ள ஆற்றங்கரைகளில் ஆடி அமாவாசையை ஒட்டி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே இந்தப் பகுதிகளில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.