ம.நடராஜன் மறைவுக்கு உதகையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1975-ஆம் ஆண்டில் ம.நடராஜன் கோவை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இருந்தபோது கோவை மாவட்டத்துடன் நீலகிரி மாவட்டமும் இணைந்திருந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்திற்கான செய்தி, மக்கள் தொடர்புத் துறை அலுவலராகவும் ம.நடராஜன் பணியாற்றியுள்ளதால் அவரது மறைவுக்கு, அப்போது அவருடன் பணியாற்றியவர்களும் அப்போதிருந்த செய்தியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.