கூடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் சனிக்கிழமை நடைபெற்ற திடீர் சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் பார்வதி, வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோரது தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி பணியாளர்கள் அடங்கிய இரண்டு குழுவினர்
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, 19 கடைகளில் 14.150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.