கூடலூர் கோழிப்பாலம் பகுதியிலுள்ள பாரதியார் கலை, அறிவியல் கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.வடிவேலு தலைமை வகித்து கல்லூரி வளாகத்திலுள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.