உதகை அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உதகையில் மஞ்சனக்கொரை பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (24). இவர், திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் உதகை நகரிலிருந்து மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, முள்ளிக்கொரை அருகே நஞ்சநாட்டிலிருந்து உதகை நோக்கி அரசுப் பேருந்து வந்துள்ளது. ராஜகண்ணன் என்பவர் ஓட்டி வந்த இப்பேருந்து பயணிகளை இறக்கி விட்டுவிட்டு புறப்படும்போது எதிரில் வந்த சந்தோஷ் முன்னால் சென்ற ஒரு காரை முந்த முயற்சிக்கையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த எமரால்டு காவல் நிலைய அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.