கூடலூரை அடுத்துள்ள மங்குழி கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழா பாரம்பரிய ஊர்வலத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மங்குழி பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது. இதையொட்டி,
பூர்வகுடிகளின் பாரம்பரிய முறைப்படி அத்திப்பாளி பகுதியிலுள்ள
தென்னங்குலையை அறுவடைசெய்து பூஜை செய்து கோயில் பூசாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பூஜை செய்தனர். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழா ஜனவரி 20 ஆம் தேதி நிறைவடைகிறது.