கூடலூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 444 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்புக் குழுவான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று
வருகிறது. கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 444 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.