உதகை, குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இந்த மழையை நம்பி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்க்கறிகளை பயிரிட்டிருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.