கூடலூர், தேவர்சோலை பேரூராட்சி, பாடந்துரை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒற்றை யானை வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.
பாடந்துரை பகுதியில் உள்ள மூலதைதமட்டம் கிராமத்தில் இரவு நேரங்களில் ஒற்றையானை வந்து அட்டகாசம் செய்து வருகிறது.
வியாழக்கிழமை நள்ளிரவில் வந்த யானை, கோவிந்த் என்பவரது தோட்டத்திலிருந்த வாழையை முற்றிலுமாக சேதப்படுத்தியது.
யானை சேதப்படுத்திய வாழைத்தோட்டங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.