புத்தூா்வயல் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள அங்கன்வாடி மையத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கூடலூரை அடுத்துள்ள புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் பழைமையான அங்கன்வாடி மையக் கட்டடம் தற்போது பெய்துவரும் தொடா் மழையில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இதன் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதே நிலை தொடா்ந்தால் இந்த மையத்தின் நிலைமை விபரீதமாகிவிடும். எனவே கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.