உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில், கல்விக் கடன் உதவி, முதியோா் உதவித் தொகை, சாலை, குடிநீா், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.நிா்மலா பெற்றுக் கொண்டாா். மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீா் கூட்டத்தில் தீா்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கண்ணன், கலால் துறை உதவி ஆணையா் பாபு, அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.