கூடலூரை அடுத்துள்ள முதிரக்கொல்லி கிராமத்தில் அடிப்படை வசதியில்லாமல் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, அதனை அப்பகுதி மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு, முதிரக்கொல்லி கிராமத்தில் ஏற்கெனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைப் புதுப்பித்துள்ளனர். எனினும் குடிநீர், மின்இணைப்பு எதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. அதற்குள் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் திறக்க திட்டமிடப்பட்டது. இதை அறிந்த கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, திறப்பு விழாவைத் தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.