குன்னூர் வண்டிச்சோலைப் பகுதியில் நான்கு நாள்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கமுடியாமல் வனம் மற்றும் தீணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
நீலகிரியில் இந்தாண்டு கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வனப் பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப் பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.
இந்நிலையில் குன்னூர் அருகே வண்டிச்சோலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த நான்கு நாள்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து தீ பரவி வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் தவித்து வருகின்றனர். இவர்களுடன் சுமார் 40 பேர் கொண்ட பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.