கூடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புதன்கிழமை அரசு சித்த மருத்துவக் குழு சார்பில் சித்த மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அத்திபாளி அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சித்த மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை வழங்கினர்.