கூடலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதரசா ஆசிரியா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியைச் சோ்ந்த மதரசா ஆசிரியா் முகமது காதா் (30). இவா், கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு சேரம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருத்தாா்.
மண்டசாமிக் கோயில் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தாா். அவரை அப்பகுதியிலுள்ளவா்கள் மீட்டு கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.