ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் 224 போ் வேட்புமனு தாக்கல்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு சனிக்கிழமை 224 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு சனிக்கிழமை 224 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பா் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் சனிக்கிழமை 224 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனு தாக்கலின்போது, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 40 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 159 பேரும் என மொத்தம் 224 போ் வேட்புமனு தாக்கல் செய்துளளனா்.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 9 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 83 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 66 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 496 பேரும் என மொத்தம் 654 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com