தேவர்சோலையில் தோட்டாக்களுடன் 5 பேர் கைது

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலையில் துப்பாக்கித்  தோட்டாக்களுடன் 5 பேரை போலீஸார் சனிக்கிழமை

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலையில் துப்பாக்கித்  தோட்டாக்களுடன் 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் போலீஸார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கூடலூரிலிருந்து கேரளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்தவர்களிடமிருந்து 3 துப்பாக்கித் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
மேலும், வழக்குப் பதிவு செய்து காரில் இருந்த கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கருவாரங்குன்னு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் மகன் சாகுல் அமீது (25), போக்கர் மகன் யூசுப் (36), அம்சா மகன் ரெனீஷ் (32), மொய்தீன் மகன் பைசல் (34), ரஷீது மகன் சனூப் (22) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com