கூடலூரில் உள்ள காசிகா இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.இன்பசேகரன், மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
காசிகா பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையப் பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், தலைவர் காளிமுத்து, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பா.சத்தியநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.