வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடக்கிறது.
இதுதொடர்பாக கோவை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை மண்டல ஆணையர் ஜெய் வதன் இங்க்லே தலைமையில் உதகை கமர்ஷியல் சாலையில் உள்ள நஹார்அரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 17) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் தொழிலாளர் வைப்பு நிதி ஆணையத்துடன் கணக்கு தொடர்புள்ள அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.