பாடந்தொரை கிராமத்தில் காக்கைகள் மர்மச் சாவு
By DIN | Published On : 29th January 2019 01:11 AM | Last Updated : 29th January 2019 01:11 AM | அ+அ அ- |

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள பாடந்தொரை கிராமத்தில் சுமார் 30 காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற வனத் துறையினர், இந்தக் காக்கைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.