நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கோடமூலா பழங்குடியினர் கிராமத்தில் ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடமூலா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளம்பெண்களுக்கு உள்ளாடைகள், ஆடைகள் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி "டிரீம்ஸ் இந்தியா' கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இராசி.ரவிக்குமார் தலைமை வகித்து ஆடைகள் வழங்கினார். இதில் கிராம மக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.