நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் நிலப்பட்டா வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வியாழக்கிழமை இரவு கைவிடப்பட்டது. எருமாடு பகுதியிலுள்ள வெட்டுவாடி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்டகாலமாக தாங்கள் குடியிருந்து விவசாயம் செய்துவரும் நிலத்துக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் வியாழக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.