இந்திய விமானப்படைத் தேர்வுகளுக்காக உதகையில் வரும் 17ஆம்தேதி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜூன் 17ஆம் தேதியன்று ஏர்மேன் தேர்வு மற்றும் இந்திய விமானப்படைதே தேர்வுகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
உதகையிலுள்ள அரசினர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் 16 வயது முதல் 20 வயதுக்கு உள்பட்ட, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்களுக்கு இந்திய விமானப்படை அலுவலர்கள் மூலம் உரிய விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ, அல்லது 0423- 244 4004 என்ற தொலைபேசி எண்ணிலோ பெற்றுக் கொள்ளலாம்.