கூடலூர் தோட்டக் கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணைத் திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோட்டக் கலைத் துறையின் வேளாண்மைத் தொழில்நுட்ப முகமை திட்டமும் சேவைகள் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய முகாமில், சுந்தரராஜன், கள இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.
கூட்டுப் பண்ணைக் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் லட்சுமணன் பயிற்சி அளித்தார். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் க.யமுனபிரியா வரவேற்றார். உதவித் தொழில்நுட்ப மேலாளர் ஆர்.சந்தியா நன்றி கூறினார்.