38 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்:  ரூ.1 லட்சம் அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒட்டுமொத்தக் கள ஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒட்டுமொத்தக் கள ஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 38 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.1 லட்சம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட உதகை, குன்னூர், நெல்லியாளம் மற்றும் கூடலூர் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்படி ஒட்டு மொத்த கள ஆய்வு மண்டல  அலுவலர்களால் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.  
இதற்காக  உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாகப் பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.  
ஆய்வின்போது,  மாவட்டத்தில் மொத்தம் தடை செய்யப்பட்ட சுமார் 38 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. ரூ.1 லட்சத்து 1,600 ரொக்கம் வசூலிக்கப்பட்டது.  
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,  "நீலகிரி மாவட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப்  பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பதோடு  பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதையும் தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com