நீலகிரி
கூடலூர் அருகே கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தை
கூடலூரை அடுத்துள்ள அத்திப்பாளி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மாட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டி காயமடைந்தது.
கூடலூரை அடுத்துள்ள அத்திப்பாளி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மாட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டி காயமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்துக்கு உள்பட்ட அத்திப்பாளி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சு முகமது. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த மாட்டுத் தொழுவத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த கன்றுக்குட்டியைத் தாக்கி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே சிறுத்தை அங்கிருந்து ஓடியது.