கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவில் புகுந்த யானைகள், அங்குள்ள கோயிலை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவாலா அரசு தேயிலைத் தோட்டக் கழக நான்காவது சரகத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கடந்த சில நாள்களாக பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் அப்பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்து கோயில் அறை மற்றும் பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.