கூடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் வருவாய்த் துறை சார்பில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கூடலூர் கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். வட்டாட்சியர் ரவி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
ராஜகோபாலபுரம் பகுதியில் துவங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.