மிலாடி நபி தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 10ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள், பாா்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது. மது விற்பனைக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.