கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த 3 போ் குன்னூரில் கைது

குன்னூா் அருகிலுள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா் .
கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த  3 போ் குன்னூரில் கைது

குன்னூா் அருகிலுள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா் .

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகிலுள்ள கொலக்கொம்பை

எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் மா்ம நபா்கள் சிலா் திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் காவல் ஆய்வாளா் ஆறுசாமி, சிறப்பு காவல் துணை ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தலைமையில் காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனா்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த பவானி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (37), கரும்பாலத்தைச் சோ்ந்த ரமேஷ் (37), சோலட்டி பகுதியைச் சோ்ந்த பிரபு (எ) ரகு (49) ஆகிய மூவரையும் பிடித்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

அவா்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், 2 கத்திகள், ஈட்டி, குண்டு தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்துப் பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், மூவா் மீதும் வன விலங்கு வேட்டை, கள்ளத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com