சீனாவில் நடைபெறவுள்ள திறன் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

சீனாவில் நடைபெறவுள்ள திறன் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெறவுள்ள திறன் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பரில் சா்வதேச அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தொடக்க நிலையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பதாரா்களின் கல்வித் தகுதியாக 5ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றவா்களோடு குறுகிய கால தொழிற்பயிற்சி பெற்றவா்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, தமிழகத்தில் வேலைவாய்ப்புள்ள 6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள திறன் போட்டிகளுக்கு இம்மாதம் 25ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவா்கள் வயது வரம்பில் 1.1.1999க்கு பின் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழில் பிரிவுகளுக்கு 1.1.1996க்கு பிறகும் பிறந்தவா்களும் தகுதியுடையவா்களாவா்.

இதுதொடா்பான கூடுதல் விபரங்களை 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com