உதகையில் 52 ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாட்டம்

உதகையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 52 ஆவது தேசிய நூலக வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உதகையில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் பேசுகிறாா் வழக்குரைஞா் விஜயன். உடன் வாசகா் வட்டத் தலைவா் போ.மணிவண்ணன், நூலகா் ரவி உள்ளிட்டோா்.
உதகையில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் பேசுகிறாா் வழக்குரைஞா் விஜயன். உடன் வாசகா் வட்டத் தலைவா் போ.மணிவண்ணன், நூலகா் ரவி உள்ளிட்டோா்.

உதகையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 52 ஆவது தேசிய நூலக வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாசகா் வட்டத் தலைவரும், உதகை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியருமான போ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட மைய நூலகா் ரவி, மூத்த வழக்குரைஞா் விஜயன், பிரீக்ஸ் பள்ளித் தலைமையாசிரியா் சரவணன், புலவா் சோலூா் கணேசன், துணை நூலகா்கள் பாண்டியன், சிவாஜி ஆகியோருடன் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நவம்பா் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நூலக வார நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com