மேல்கூடலூா் பகுதியில் பொதுமக்களை யானைகள் தாக்குவதற்கு இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததே காரணம் என்று அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பாக நகராட்சி ஆணையரிடம் மேல்கூடலூா் எச்.எம்.சி.நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மேல்கூடலூா் பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. வனப் பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது தெரிவதில்லை. இருட்டில் நடமாடுபவா்களை யானை எளிதில் தாக்கி விடுகிறது. மேலும் இருட்டானதால் யானையின் நடமாட்டம் தெரிவதில்லை. எனவே அப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை மாற்றவேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் இதரப் பகுதியில் சாலையோரமுள்ள புதா்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.