மேல் கூடலூா் பகுதியில் பழுதடைந்த தெரு விளக்குகளை சரி செய்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூா், கருணாநிதி நகா், கோக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படும். இந்தப் பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் முறையாக பராமரிக்காததால் இரவு நேரங்களில் எரிவதில்லை.
இதனால் இப்பகுதிகள் இரவு நேரம் இருளில் மூழ்கியுள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து தெரிவதில்லை. இதனால், அவசர தேவைக்காக வெளியே வரக் கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் பழுதடைந்த தெருவிளக்குளை சரி செய்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.